ஓடும் பேருந்தில் படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் செய்த அட்ராசிட்டி... ஓட்டுநர் செய்த தரமான சம்பவம் - சென்னையில் பரபரப்பு

x

சென்னையில் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மந்தைவெளி நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் பலர், படிக்கட்டில் நின்றவாறு பாட்டுப் பாடிக் கொண்டும், பயணிகளை இடையூறு செய்தவாறும் பயணித்ததாக தெரிகிறது. இதனைக் கண்டித்த ஓட்டுநரையும், மாணவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், சிந்தாமணி சிக்னல் அருகே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்