ஆஹா.. என்ன ஒரு தெய்வீக குரல்! - பாட்டு பாடி மெய்சிலிர்க்க வைத்த 8 வயது சிறுவன்

x

8 வயதிலேயே போரூரைச் சேர்ந்த சிறுவன், பக்திப் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார். சென்னை, போரூரைச் சேர்ந்தவர் அரிஹரன் சிவராமன். இவர், வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன், சூர்ய நாராயணன், சிறு வயதிலேயே பல்வேறு பக்திப் பாடல்கள் பாடி வருகிறார். சுமார், 60-க்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடமாக பாடும் சிறுவன் சூர்ய நாராயணன், பல்வேறு மேடைக் கச்சேரிகளிலும் பங்கேற்றுள்ளார். இளம் வயதிலேயே தனது திறமையால், காண்போரை சிறுவன் கவர்ந்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்