"அனைத்து ரயில் நிலையங்களிலும்.." - தெற்கு ரயில்வே உத்தரவு

x

அனைத்து ரயில் நிலையங்களிலும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூம், பேனல் ரூம், ரிலே ரூம்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை சிக்னல் பொறியாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ரயில்களின் இயக்கத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் மூலம் ரயில்களின் இயக்கம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ரெக்கார்டு செய்யவும், தேவை ஏற்பட்டால் கண்காணிக்கவும், பழைய பதிவுகளை எடுத்துப் பார்க்கும் வகையிலும் ஸ்டோரேஜ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்