அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் ரயில்..பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

x

அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்...

மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி மற்றும் அசாம் மாநிலம், கவுஹாத்தி இடையே, இயக்கப்பட உள்ள இந்த ரயில், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் முதல் ரயிலாகும். தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில், சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதே போல், புதிதாக மின் மயமாக்கப்பட்ட 182 கிலோ மீட்டர் ரயில் பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதிக வேகத்தில் ஓடும் ரயில்களுடன் மாசு இல்லாத போக்குவரத்தை வழங்கவும், ரயில்களின் இயக்க நேரத்தை குறைக்கவும் இது உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்