திட்டமிட்டபடி பாக்.கில் ஆசிய கோப்பை தொடர்? - இந்திய அணியை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ

x

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடைபெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப மறுத்தது. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வேறு நாட்டிற்கு மாற்றப்படுமா என கேள்வி எழுந்தது. இந்தநிலையில் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானிலேயே நடத்தவும், தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில், இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்