ஆசிய கோப்பை: "இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு 40% அபராதம்" - ஐசிசி நடவடிக்கை

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாமதமாக பந்து வீசியதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, பந்துவீச கூடுதல் நேரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எடுத்துக்கொண்டதாக ஐசிசி கூறி உள்ளது. இதனால் இரு அணிகளுக்கும், போட்டி ஊதியத்தில் 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்து உள்ளது. இதேபோல், இரு அணி வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்