அஸ்வினுக்கு 25% அபராதம்... ஐபிஎல் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு - ஏன் தெரியுமா?

x

ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியுடனான போட்டியில் பனிப்பொழிவு காரணமாக நடுவர்கள் அவர்களாகவே பந்தை மாற்றியதாகவும், தாங்கள் கேட்காமல் பந்தை நடுவர்கள் மாற்றியதாகவும் அஸ்வின் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அஸ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. முன்னதாக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்