மயானத்திற்கு செல்ல பாதையில்லாததால் சடலத்தை ஆற்றில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்

x

மன்னார்குடி அருகே சாலை மற்றும் பாலம் இல்லாததால் மூதாட்டியின் சடலத்தை, கிராம மக்கள் ஆற்றை நீந்திக் கடந்து, தூக்கி சென்றனர். அசேஷம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாந்தாமாணிக்கம் கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன.

இந்த கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

அவரது உடல் புதர் மண்டிய சாலை வழியாக, பாலம் இல்லாததால், ஆற்றைக்கடந்து இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இறந்தவரின் உடலை தண்ணீரில் மிதந்தவாறு எடுத்துச்செல்லப்படுவதால், உடனடியாக சாலை மற்றும் பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்