"அதிமுக பொதுச்செயலாளராக..." - தொண்டர்களுக்கு ஈபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு

x

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதிமுக பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் தனக்கானது மட்டுமல்ல என்றும், மக்களாட்சி தத்துவத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்றும் கூறி உள்ளார். அதிமுக எம்.பி, எம்.ஏல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். பொதுச்செயலாளராக தேர்வானதை எண்ணி பெருமை அடைவதாகவும், அதிமுக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்