மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ.. திருமணமாகியும் மிரட்டி கூப்பிட்ட இளைஞர் - பெண்ணுக்கு நடந்த கொடுமை

x
  • ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த சுரேந்தர் மரக்கடை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண் உடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
  • கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பின்னர் அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பல முறை பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
  • அந்த பெண்ணுக்கு திருமணம் ஆன நிலையில், மீண்டும் தொடர்பு கொண்ட சுரேந்தர், 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வைத்து விட்டு, இரண்டு லட்சம் பணம் மற்றும் 13 பவுன் நகையை எடுத்து வர வேண்டும் என கூறியுள்ளார்.
  • வரவில்லை என்றால், இருவரும் நெருக்கமாக உள்ள வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
  • இந்நிலையில் பெண்ணின் தாயார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், சுரேந்தர் இளம்பெண்ணை விட்டு தலைமறைவாகி உள்ளார்.
  • உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும், அருப்பு கோட்டை மகளிர் போலீசாரிடமும் அந்த பெண், நடந்ததை கூறிய நிலையில் சுரேந்தரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்