ஆருத்ரா மோசடி..90 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ஆவணங்கள்.. சிக்கிய இருவர்..!

x
  • ஆருத்ரா மோசடி வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது.
  • இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் செந்தாமரை என்பவரையும் இன்று சந்திர கண்ணன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
  • ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி விவகாரம் கைது செய்யப்பட்ட ராஜா செந்தாமரை கூடுதல் இயக்குனராக செயல்பட்டு ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தொடர்பான விளம்பரங்கள் அனைத்தையும் செய்தது தெரியவந்துள்ளது
  • குறிப்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷ் என்பவருக்கு கூடுதல் இயக்குனராக செயல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது
  • கைது செய்யப்பட்ட மற்றொரு நிர்வாகியான சந்திர கண்ணன் என்பவரை அண்ணா நகரில் போலீசார் கைது செய்து அவருடைய இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்
  • சந்தரக்கண்ணன் முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெற்றது தொடர்பாக 90 மூட்டைகளில் தொடர்பான ஆவணங்களை பதுக்கி வைத்திருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்
  • குறிப்பாக கைது செய்யப்பட்ட ராஜா செந்தாமரை மற்றும் சந்தரக்கண்ணன் ஆகிய இருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 5 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது
  • அண்ணா நகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த முதலீட்டாளர்கள் ஆவணம் மூட்டைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்