ஏ! விடாத புடி புடி..." மீன்களை அள்ளி சென்ற மக்கள்- திருச்சி அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா

x

திருச்சி மாவட்டம் கஸ்பா பொய்கைபட்டியில் உள்ள அணைக்குளத்தில் நடந்த மீன் பிடி திருவிழாவில், பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அணைக்குளத்தில் நீரின் அளவு குறைந்ததால், மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றனர். கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டு வகை மீன்கள் சிக்கிய நிலையில், எதிர்பார்த்த அளவு பெரிய மீன்கள் கிடைக்கவில்லை என, பொதுமக்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்