கைது செய்யப்பட்ட ஹோமியோபதி டாக்டர்.. போலீசுக்கு ஊர் மக்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்..சிரித்து கொண்டே வெளியே வந்த டாக்டர்

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் என கைது செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர், பொதுமக்கள் போராட்டத்தால் போலீசாரால் விடுவிக்கப்பட்டார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு என்ற ஹோமியோபதி மருத்துவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ரெங்கராம்பட்டி என்ற கிராமத்தில் குடியேறி ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து, காவல் நிலையத்திற்கு சென்ற கிராம மக்கள், மருத்துவர் பாபுவை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் மருத்துவரை விடுவித்து எச்சரித்து அனுப்பினார். அப்போது, பொதுமக்கள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்