நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட்..! | Actress Jayaprada
விசாரணைக்கு ஆஜராகாததால் பாலிவுட் நடிகையும், எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவராதப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் ஜெயப்பிரதா போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரதா, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையில் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இந்த நிலையில் ஜெயப்பிரதாவுக்கு கண்டனம் தெரிவித்து கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவர் ஜாமீனில் வெளிவர முடியாதப்படி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
Next Story