நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடிவாரண்ட்..! | Actress Jayaprada

x

விசாரணைக்கு ஆஜராகாததால் பாலிவுட் நடிகையும், எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவராதப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் ஜெயப்பிரதா போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரதா, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையில் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இந்த நிலையில் ஜெயப்பிரதாவுக்கு கண்டனம் தெரிவித்து கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவர் ஜாமீனில் வெளிவர முடியாதப்படி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்