செந்தில் பாலாஜி கைது - கொந்தளித்த சீமான்

x

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு தற்போது நடவடிக்கை எடுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன என்றார். மேலும், நாம் தமிழர் ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது, அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெறும் வகையில் சட்டம் கொண்டுவருவேன் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்