"சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தாதது ஏன்?" ஏ.ஆர். ரகுமானிடம் கேள்வியெழுப்பிய ரசிகை

x

அனுமதி பெறுவதற்கே 6 மாதங்கள் ஆகிவிடுவதால் தான், சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் புனேவில் நடைபெறவுள்ள தனது இசை நிகழ்ச்சி தொடர்பான தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் கமெண்ட் செய்த ரசிகை ஒருவர், சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை என கேள்வியெழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர். ரகுமான், நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்குவது ஆறுமாத கால நடைமுறையாக இருப்பதால், சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தவில்லை என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்