2 குழந்தைகள் பிறந்தும் தகாத உறவு.. இளைஞருடன் தனியாய் சென்ற தாய் -மீட்டு அழைத்து வந்த பின் நடந்த பயங்கரம்

x

செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. சத்யாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சத்யா, திருப்பூரில் தங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர், சத்யாவிற்கு அறிவுரை கூறி, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள தேக்கு மரத் தோப்பில், மர்மமான முறையில் சத்யா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யாவின் தற்கொலைக்குக் காரணம் கள்ளக்காதலன் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்