கம்பத்தை அலறவிட்ட அரிக்கொம்பன் - உடல் நிலை எப்படி இருக்கு..? வெளியானது அதிர்ச்சி தகவல்

x

அரிக்கொம்பன் யானையின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், வனபகுதியில் விடப்படும் என்று, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஓட்டேரி ஏரியில், தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிக்கொம்பன், யானையின் உடல் நிலை, மிக மோசமான நிலையில் இல்லை என்றும், சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விடுவோம் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்