கேரள ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து - முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார்

x

குடியரசு தினத்தையொட்டி கேரள ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும், அம்மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், மத்திய அரசு மீதான விமர்சனம் அடங்கிய ஆளுநர் உரையை, ஆரிப் முகம்மது கான் முழுமையாக வாசித்தார்.

இந்நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி, தேநீர் விருந்துக்கு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு ஆரிப் முகம்மது கான் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் பினராயி விஜயன், தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்