கணவருடன் தகராறு..உயிரை விட்ட மனைவி... மகளின் சாவில் மர்மம்.. தாய் பரபரப்பு புகார்

x

திருவண்ணாமலை ஆரணி அருகே கணவனுடனான கருத்து வேறுபாடால் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகாரளித்துள்ளார்.

புதூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கல்பட்டு கொள்ளைமேடு பகுதியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயது மகன் உள்ளார்... கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன... இந்நிலையில் குழந்தை கவினை கவனமாக பார்த்துக் கொள்வது குறித்து பிரகாஷ் கவிதாவை கண்டித்ததாகவும், இதனால் மனஉடைச்சல் ஏற்பட்ட கவிதா வீட்டின் அருகே இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கவிதாவின் தாயார் அம்பிகா தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாஷ் கவிதா தம்பதியினருக்கு திருமணமாகி 3 வருடம் ஆனதால் ஆரணி சப்-கலெக்டர் விசாரணைக்கு இவ்வழக்கு உட்படுத்தபட்டது.


Next Story

மேலும் செய்திகள்