மொட்டை மாடியில் தூங்குவதில் தகராறு.. பெற்ற மகளை ஆத்திரம் தீர 20 முறை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

x

குஜராத்தில் பல முறை கண்டித்தும் தொடர்ந்து, வீட்டின் மாடியில் தூங்கி வந்த 19 வயது மகளை, அவரது தந்தையே கத்தியால் கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் சூரத் அருகே கடோதரா பகுதியை சேர்ந்தவர் ராமானுஜா. இவருக்கு ரேகா என்பவருடன் திருமணமான நிலையில், 19 வயதில் இளம் பெண் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். இதில்,19 வயது இளம் பெண்ணான சந்தா, குடியிருப்பின் மொட்டை மாடியில் இரவு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை ராமானுஜா விரும்பாத நிலையில், இது தொடர்பாக, தனது மனைவியிடம் கூறி எச்சரித்து வந்துள்ளார். இந்நிலையயில், தொடர்ந்து மகள் மாடியில் தூங்கி வந்தததால், மனைவியுடன் சண்டையிட்ட அவர், மகளை கத்தியால் கொடூரமான முறையில் பல முறை குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், மனைவியின் விரல்களை துண்டாக வெட்டிய ராமானுஜா, தனது 3 மகன்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்