மது போதையில் ஏற்பட்ட தகராறு.. மாறி மாறி பீர் பாட்டிலால் தாக்குதல் -வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவை மாவட்டம் சுங்கம் பகுதியில், தனியார் கல்லூரி அருகே மது போதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பானது.

இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர், மாறி மாறி பீர் பாட்டில்களால் தாக்கிக் கொண்டனர்.

தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com