முகத்தில் டார்ச் அடித்ததால் தகராறு.. இளைஞரை வெட்டி கொன்ற கும்பல்- செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

x

இரவில் மது அருந்தும் போது முகத்தில் டார்ச் அடித்ததால் ஏற்பட்ட தகராறு - இளைஞரை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல் கைது

செங்கல்பட்டு அடுத்த பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் தனது நண்பர்களான சந்தோஷ் மற்றும் பிரபா ஆகியோருடன் மலாலிநத்தம் என்கிற பகுதியில் கடந்த வாரம் மது அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இவர்களின் முகத்தில் டார்ச் அடித்து பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தோஷ், பிரபா, ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோருக்கும் ராஜேஷ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் ராஜேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சந்தோஷ், பிரபா, ராஜேஷ் கண்ணா ஆகியோர் நேற்று மாலை பட்டாகத்திகளுடன் மலாலிநத்தம் பகுதிக்கு சென்று ராஜேஷை தேடி உள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ராஜேஷ் அதே பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான கூட்ரோடு நாகராஜ் என்பவரிடம் சென்று நடந்த சம்பவம் குறித்து முறையிட்டுள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் கண்ணாவிடம் கூட்ரோடு நாகராஜ் செல்போனில் பேசியபோது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது‌.

அதில் நாகராஜனை ராஜேஷ் கண்ணா தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கூட்ரோடு நாகராஜன் தனது கூட்டாளிகளான ராஜேஷ், ஜீவா, ரமேஷ், அஜித், லோகேஷ், பார்த்திபன் ஆகியோருடன் காரில் சென்று பாரதபுரத்தில் இருந்த ராஜேஷ் கண்ணாவை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது‌.


Next Story

மேலும் செய்திகள்