போலீசாருடன் இருதரப்பினர் வாக்குவாதம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x

சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோயில் திருவிழா தொடர்பான சமாதான கூட்டத்தில், போலீசாருடன் இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தகரை கிராமத்தில் செல்லியம்மன், மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் வரும் 8 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர், குடமுழுக்கு விழாவில் தங்களுக்கும் ஒரு கரை வேண்டும் என கோரினர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால், நேற்று வட்டாட்சியர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது, இருதரப்பினரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கூட்டத்தில் இறுதிவரை உடன்பாடு எட்டப்படாததால், இந்த விவகாரம் தொடர்பாக ஊரில் பேசி முடிவு செய்யவும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்தகூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்