நகராட்சி பொறியாளர் - கவுன்சிலர் இடையே வாக்குவாதம் - கோவில்பட்டியில் பரபரப்பு

x

கோவில்பட்டியில், கவுன்சிலரை ஒருமையில் பேசிய நகராட்சி பொறியாளரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். வேலாயுதபுரம் பகுதியில் நடைபெறும் குடிநீர் பைப் லைன் திட்ட பணிகளை, நகராட்சி பொறியாளர் ரமேஷ் பார்வையிட்டார். அப்போது, கவுன்சிலர் லவராஜாவுக்கும் பொறியாளர் ரமேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கவுன்சிலர் லவராஜாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகராட்சி பொறியாளர் ரமேஷின் வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்