கோப்பையுடன் தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் வெற்றி வாகை சூடிய மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, கோப்பையுடன் தாயகம் திரும்பியது.
x

அந்நாட்டின் நேரப்படி, அதிகாலை 4.30 மணிக்கு தலைநகர் பியூனஸ் அய்ரஸில் வீரர்களுடன் தரையிறங்கிய விமானத்தில், மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையுடன் திரும்பியுள்ள தங்களின் சாம்பியன்ஸை அர்ஜென்டினா மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மக்கள் வெள்ளம் புடை சூழ... ரசிகர்களின் பேரன்பில் தத்தளித்தவாறு வீரர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்