தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?...புக்கிங் தேதி அறிவிப்பு

x

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் முன்பதிவு வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ஆம் தேதி , ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், ரயில்களில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்கள் வரும் 12 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நவம்பர் 9ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் 12 ஆம் தேதியும் , நவம்பர் 10ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் 13 ஆம் தேதியும் , தீபாவளிக்கு முதல் நாள் பயணிக்க விரும்புவோர் 14ஆம் தேதியும் , தீபாவளி அன்று பயணிக்க விரும்புவோர் 15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்