இவர்கள் மாணவர்களா? அரக்கர்களா? - அப்பாவி ஜூனியரின் தந்தையையும் கொடூரமாக அடித்த சீனியர்கள்

x

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த ராகிங்கை தட்டிக்கேட்ட சென்ற தந்தையை அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுகாத்தியில் இயங்கி வரும் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பு மாணவர்களால் ராகிங் என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பள்ளியில் புகார் அளிக்க சென்றுள்ளார். இதனை அறிந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் அதே மாணவனை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தந்தையையும் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்