முன்னாள் அமைச்சர்கள் குற்றவாளிகளா? - கொதித்து போன ஈபிஎஸ்

x

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் விசாரணையே தொடங்கப்படாத நிலையில், அவர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோர் மீது, தனது பொய் வழக்கு போட்டுவிட்டு, இவரே நீதிபதியாக மாறி, குற்றம் சுமத்தியவர்களை 'குற்றவாளிகள்' என்று குறிப்பிட்டு, மோசடி அரசியல் செய்வதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை, அரசியல் சார்பற்ற நேர்மையான வழக்கறிஞர்களை நியமித்து விசாரணையை எதிர்கொள்ள வே​ண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்