"இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேச்சு

x
  • இந்தியாவிற்கு படித்த பிரதமர் தேவைப்படுவதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
  • அப்போது மேடையில் பேசிய அவர், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்றார்.
  • பாஜகவிற்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளதாக தெரிவித்த அவர், வருகிற மக்களவை தேர்தலில் பாஜக பிரச்சினைகளை சந்திக்கும் என தெரிவித்தார்.
  • இதனிடையே, நாட்டிற்கு படித்த பிரதமர் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தெரிந்த நபர் பிரதமாராக வர வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்