"உங்களுக்கு வாழ தகுதியில்லை"...பரபரப்பை கிளப்பிய மர்ம பார்சல் - யார் அந்த கடவுளின் தோழன் - அதிர்ந்து போன அதிர்ந்து போன அரக்கோணம் போலீசார்

x
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
  • உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், கழுத்து செயின் மற்றும் தாலி நகையின் பெயருடன், நகைக்கடை பெயரையும் குறிப்பிட்டிருந்த அந்த பார்சலை கைப்பற்றினர்.
  • இதையடுத்து, பிரித்து பார்த்தபோது, உள்ளே டைல்ஸ் கற்களும், கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், அடுத்தவர்கள் பொருளை திருடும் உங்களை போன்றவர்கள், இந்த உலகில் வாழத் தகுதியில்லை, இப்படிக்கு கடவுளின் தோழன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், பார்சலை வீசிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்