“கஞ்சா போதை ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது“ - விரக்தியில் ஷட்டரில் எழுதி ஒட்டிய வியாபாரி

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கஞ்சா போதையில் பிரச்சினையில் ஈடுபடும் ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

  • தக்கோலம் கீழ் பஜாரில் தூத்துக்குடியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
  • இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரவுடிகள் கஞ்சா போதையில் வந்து, முத்துராமலிங்கத்திடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
  • இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகாரளிக்க, ரவுடிகளான ஆகாஷ் மற்றும் அவரது நண்பர், முத்துராமலிங்கத்தை மிரட்டி உள்ளனர்.
  • இதில், அச்சமடைந்த அவர் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இருப்பினும், ரவுடிகள் கடைக்கு வந்து தொடர் தாக்குதலில் ஈடுபட, முத்துராமலிங்கம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
  • ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
  • இதனால், வேறு வழியில்லாமல் கடையை மூடிய அவர், கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால் பாதுகாப்பு கருதி கடை காலவரையின்றி மூடப்படுகிறது என நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்