ஆன்லைனில் பட்டா மாறி வழங்கியதாக.. தற்கொலைக்கு முயன்ற விஏஓ - விசாரணையில் சிக்கிய வருவாய் கோட்டாட்சியர்

x

அரக்கோணத்தில் விஏஓ ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி வருபவர் இலியாஸ். இவர் சில நாட்களுக்கு முன்பாக ஆன்லைனில் ஒருவருக்கு பட்டா மாறி வழங்கியதாகவும்,


இது தொடர்பான விசாரணையில் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் இலியாஸிற்கு மன அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதனால், வீட்டில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட இலியாஸ், கழிவறையில் கழுத்தை அறுத்து தற்கொலை முயன்ற சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மீட்டு இலியாஸை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்