நெருங்கும் பொங்கல்.. கரும்பு அறுவடை பணிகள் தீவிரம் | pongal2023 | sugarcane

x

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், அரசு அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியே சென்று கரும்பு கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அரசு தரப்பில் குறைந்த அளவே கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் பயிரிட்ட கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்