போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..நான் முன்னாடி குடிச்சுட்டு இருந்தேன்.. | Vijay Antony

x

நாளை உலக போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திரைப்பிரபலங்கள் விஜய் ஆண்டனி, ரம்யா பாண்டியன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பேசிய விஜய் ஆண்டனி, தான் குடிப்பேன் என்றும், இது குடிப்பழக்கத்திற்கு எதிரான நிகழ்ச்சி இல்லையே என்றும் சிரித்தவாறு கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சியின் நிறைவாக ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடந்த நிலையில், இளைஞர்களும் பொதுமக்களும் குத்தாட்டம் போட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்