"கேட்கும் கேள்விக்கு பதிலளித்தால் அதிக சம்பளத்தில் வேலை" புதுவிதமான மோசடி செய்த கும்பல்

x

சேலத்தில் ஆன்லைன் கேள்விக்கு பதிலளித்தால் அதிக சம்பளத்தில் வேலை எனக்கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் சிவதாபுரம் அருகே திருமலைகிரி பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர், தனது செல்போனில் பகுதிநேர வேலை விளம்பரத்தை பார்த்து குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுமார்13 லட்சம் ரூபாய் செலுத்தி பதிலளித்துள்ளார். எனினும் வேலை கிடைக்காததால், அதுகுறித்து மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வரதராஜன் புகார் கொடுத்தார். இதேபோல், சேலம் மெய்யனூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமாந்துள்ளார். புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற விளம்பரத்தை நம்பி, கடந்த 3 நாட்களில் 4 பேர் ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்