ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு தற்கொலை.. பணத்தை இழந்த விரக்தியில் மாணவர் எடுத்த முடிவு

x

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்லூரி விடுதி அறையில் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆன்லைன் ரம்மிதான் காரணமா? போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில், விருதுநகரை சேர்ந்த வினோத்குமார், கணிப்பொறி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதி அறையில் தனியாக இருந்த , வெகுநேரமாகியும் கதவை திறக்காததால், சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, வினோத்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், பெற்றோர் அடிக்கடி பணம் பெற்றும், கடன் செயலியில் பணம் வாங்கி ஆன்லைன் ரம்மியில் இழந்ததும் தெரியவந்தது.

கடன் செயலியில் பணத்தை கட்ட முடியாததால், விரக்தி வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்