ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி...தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்

x

ஒடிசா மாநிலம் ராயகடா அருகே, சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பாடோலா பகுதியில், வேதாந்தா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு ரயில் பாதையில் வந்த சரக்கு ரயில், தடம் புரண்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், தடம் புரண்ட நான்கு பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பாதையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்