ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஷாக்... விமான கதவை திறக்க முயன்ற பயணி - நடுவானில் பதற்றம்

x

ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டனில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த‌து. அப்போது விமானத்தில் பயணித்த அமெரிக்காவை சேர்ந்த ராம் காந்த் என்பவர், சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதோடு, விமானத்தின் கதவுகளை திறக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் அவரை சமாதனப்படுத்தியுள்ளனர். விமானம் மும்பையில் தரையிறங்கிய பின்னர், அந்த பயணியை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நபர் குடிபோதையில் இருந்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்