ரவுடி கொசு கர்ணாவின் 2வது மனைவியை கிண்டல் செய்த மற்றொரு ரவுடி ஜனா - கடைசியில் வெட்டு குத்தில் முடிந்த கொடூரம்
சென்னை கொடுங்கையூரில், இரண்டாவது மனைவியை கிண்டல் செய்ததை கண்டித்த ரவுடியை, கத்தியால் குத்திய மற்றொரு ரவுடி கைது செய்யப்பட்டார்.
கொசு கர்ணா என்ற ரவுடி மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொசு கர்ணாவின் இரண்டாவது மனைவியான இந்திரா என்பவரை, ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தனன் கிண்டல் செய்துள்ளார்.
இதனை அறிந்த கொசு கர்ணா, ஜனார்த்தனை தாக்கி எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதில் கோபமடைந்த ஜனார்த்தனன், தனது நண்பர்களுடன் சேர்ந்து, எழில் நகர் ரயில்வே கேட் அருகே, கர்ணனை வெட்டியுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஜனார்த்தனை கைது செய்தனர்.
Next Story