நாற்காலியில் வந்த வினை..யார் அமர்வது என வாக்குவாதம் முற்றியதில் அடி..தடி..பள்ளி ஆண்டு விழாவில் களேபரம்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, நாற்காலி பிரச்சினையில், இளைஞரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தீவட்டிப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. ஜெகன் என்பவர், தனது உறவினரின் குழந்தைகள் பள்ளி நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதை கண்டுகளித்துள்ளார். அப்போது அங்கு வந்த அஜித், ரோஹித் ஆகியோருக்கும், ஜெகனுக்கும் இடையே நாற்காலி பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில், பள்ளியில் இருந்து வெளியே வந்த ஜெகனை, அஜித் மற்றும் ரோஹித் தாக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்