மாமல்லபுரம் சிகப்பு மண்டலமாக அறிவிப்பு

x

சென்னையில் ஜி20 கூட்டத்தை முன்னிட்டு, 4 நாட்களுக்கு ஆளில்லா விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி-20 கூட்டம் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரும் 24-ம் தேதிமுதல், 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மேலும், கிண்டி மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் தங்குகின்றனர். எனவே, வரும் 23-ம் தேதி முதல் 26 வரை, இப்பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் ஆளில்லா விமானம் மற்றும் எந்த விதமான பொருட்களையும் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்