அண்ணாமலையார் கோயில் தீப மை விற்பனை...தீயாய் பரவும் போலி கணக்குகள் - பக்தர்களே உஷார்..!

x

திருவண்ணாமலையில் தீப மை விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் போலி கணக்கு உருவாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி தீப மை விற்பனை குறித்த அறிவிப்பு வெளியானது. இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கோயில் நிவாகம் கேட்டுக் கொண்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்