அண்ணாமலையின்6 மாத பாத யாத்திரை - டிஜிபி அலுவலகத்தில் திடீர் மனு

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாத யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 11 வரை தமிழ்நாடு முழுவதும்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்கிறார். இது குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பாதயாத்திரையின் போது எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்