"பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" - அண்ணாமலை அறிக்கை

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
x

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாகவும், அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இனி, மக்களுக்கான பயணம் தொய்வின்றி தொடரும் என்ற அவர், திமுக தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறியுள்ளார். மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளதாகவும், தமிழக அரசு குறைக்கவில்லை என்றும் சாடியுள்ள அண்ணாமலை, இனியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் போராட்டம் தீவிரமாக நடக்கும் எனக் கூறியுள்ளார். பெட்ரோல் விலை குறைப்பு வரும்வரை போராட்டம் நிற்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்