ரூ.2,000 நோட்டுக்கள் திரும்ப‌ப் பெறும் விவகாரம்... மத்திய நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபர கடிதம்

x

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப‌ப் பெறும் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அரசியல்வாதிகள் பணமோசடிக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள் என கூறியுள்ள அண்ணாமலை, முறைகேடாக சம்பாதித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் மாற்றுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், அவற்றை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்‌ என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்