#Breaking|| பாஜக தனித்து போட்டியா?.. "ஓபிஎஸ்ஸிடம் சொல்லிவிட்டேன்" - நாசூக்காக சொன்ன அண்ணாமலை

#Breaking|| பாஜக தனித்து போட்டியா?.. ஓபிஎஸ்ஸிடம் சொல்லிவிட்டேன் - நாசூக்காக சொன்ன அண்ணாமலை
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில், அதிமுகவே போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்வினையாக ஓபிஎஸ் தான் ஒரு வேட்பாளரை முன்னிறுத்தப் போவதாக அறிவித்து, கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளார். அதேபோல ஈபிஎஸ் தரப்பும் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளது.

குறிப்பாக, இதில் பாஜக கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. மறுபுறமோ, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் ஆதரவு கொடுக்காமல் பாஜக தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவியது. இவையனைத்திற்கும் விடை கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலையின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு அமைந்திருக்கிறது. பல விஷயங்களைச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்