பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

x

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில், அன்னாபிஷேக விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேகம் சாத்தும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 500 கிலோ சமைத்த பச்சரிசி, சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்