அண்ணா பல்கலை. தேர்வு முடிவு நிறுத்திவைப்பு - மாணவர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை

x
  • பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் 3, 5, 7 ஆகிய செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின.
  • இதில் பல தனியார் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளிவராமல் உள்ளது.
  • இதனால் மாணவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
  • இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்