பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் - வெளிவந்த பரபரப்பு தகவல்

x
  • போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில், இதுவரை 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆம் தேதி சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் சினிமா பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
  • இவை போலி என தெரிய வந்ததைத் தொடர்ந்து, கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கிய ஹரிஷ் மற்றும் அவருடைய கூட்டாளி மகராஜன் என்கிற குட்டி ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • பின்னர் ஹரிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த அமைப்பின் மூலம் 50க்கும் மேற்பட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
  • மேலும், நிகழ்ச்சி நடத்துவதற்கு பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
  • இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கிக் கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்